நாட்டில் நிலவும் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என்று மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தம்புள்ள, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை, பதுள்ள ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார தடையைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

