Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசறை பிரதேச சபையின் உறுப்பினர் பிரதேச சபை முன்றலில் நூதனப் போராட்டம்

March 24, 2022
in News, Sri Lanka News
0
பசறை பிரதேச சபையின் உறுப்பினர்  பிரதேச சபை முன்றலில் நூதனப் போராட்டம்

பசறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் மேலுமொரு நூதனப் போராட்டமொன்றினை இன்று (24-03-2022) பசறை பிரதேச சபை முன்றலில் தலை மொட்டையடிப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கொழும்பில் போராட்டக்கள மைதானத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டமொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

ஆட்சியாளர்களின் தவறான நிருவாகத்தினால், நாடு அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு மற்றும் தட்டுப்பாடு, எரிபொருள் உள்ளிட்ட எரிவாயு ஆகியனவற்றைப் பெற மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஆகியவற்றினால் மக்கள் சொல்லெண்ணாத் துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நாடு அனைத்துத் துறைகளிலும் வங்கரோத்து நிலையினை அடைந்துவிட்டது. இவ் அவல நிலையினை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களின் கூட்டத்தினரையும், ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மேற்படி மொட்டையடிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இப் போராட்டமும் பிறிதொரு நூதனப் போராட்டமாகவே இருந்து வருகின்றது. பசறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் மேற்கொண்ட இரு போராட்டங்களும் மக்களின் பேராதவுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் இரு மணித்தியாலங்கள் நீடித்த இந்த மொட்டையடிப்புப் போராட்டத்தையடுத்து, பசறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற பசறை பிரதேச சபையின் மாதாந்த அமர்விலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் கலந்துகொண்டு, நாட்டில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்த பிரேரணையை முன்வைத்து ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் கண்டனப் பிரேரணையொன்றையும் முன்வைத்து  உரையாற்றினார்.

கொழும்பில் நடைபெற்ற பிச்சை எடுக்கும் போராட்டம்


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் | முதல்வர் மு.க. ஸ்டாலின்

Next Post

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகனுக்கு விளக்மறியல் நீடிப்பு

Next Post
கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடக பேச்சாளர் இன்று நீதிமன்றத்தில்

மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகனுக்கு விளக்மறியல் நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures