Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

December 4, 2024
in News
0
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நிலையியற் கட்டளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (04) கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது.

இனவாதம் 

தாம் இனவாத ரீதியாகக் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிலையியற் கட்டளையின் ஊடாக கருத்துரைத்திருந்தார்.

இதனையடுத்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்றிலேயே இனவாதம் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு | Archuna Defied The Standing Order Harsha De Silva

கடந்த அரசாங்கங்கள் இனரீதியாகச் செயற்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் இனரீதியாகச் செயற்படவில்லை. கடந்த காலங்களிலிருந்த அரசியல் தலைவர்கள் மீதான எதிர்ப்பின் காரணமாகவே, தம்மைப் போன்ற சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்துக்குள் இனவாதம் ஏற்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியுள்ளார்.

நிலையியற் கட்டளை

அவரை தொடர்ந்து கருத்துரைத்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியற் கட்டளைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் விளைவாகவே, புதிய உறுப்பினர்களும் அதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆமோதித்து கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிலையியற் கட்டளை உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு | Archuna Defied The Standing Order Harsha De Silva

நிலையியற் கட்டளைகள் 33 மற்றும் 32 ஆகியன வாய்மூல கேள்வியுடன் தொடர்புடையவையாகும். 

எனினும் அதனைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துரைப்பது முழுமையாகத் தவறான விடயமாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சிக்கப்போகும் அரசியல் தலைகள் : இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்

Next Post

திருடப்பட்ட சொத்துக்களை மீட்க அநுர அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Next Post
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

திருடப்பட்ட சொத்துக்களை மீட்க அநுர அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures