Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிதியை வழங்க :அமெரிக்கா கடும் நிபந்தனை

April 18, 2018
in News, Politics, World
0

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, அமெரிக்க அதிபர் கையொப்பமிட்டுள்ள சட்ட வரைவு குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

இலங்கையின் ஜனநாயக திட்டங்களுக்காக அமெரிக்கா 35 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. காணாமல்போனோர் குறித்த விவகாரத்துக்குத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

அதேவேளை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதியைப் பெறுவதற்காக இலங்கை மனித உரிமை பேரவையின் தீர்மானத்துக்கு ஏற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளது என்று அமெரிக்க இராஜாங்க அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.

அமெரிக்க அயலுறவு அமைச்சர் இதனை உறுதி செய்து நிதி ஒதுக்கீட்டு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கை சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கும் இணங்கியுள்ளது என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதி செய்ய வேண்டும்.

இலங்கை குறிப்பிட்ட நிதியை பெறுவதற்காக காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை அமைக்க வேண்டும், போரின் இறுதி தருணத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இலங்கையின் படையினருக்கு என 500,000 டொலர்களையே ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா அதனை மனிதாபிமான மற்றும் இயற்கை இடர்களைக் கையாள்வதற்கான பயிற்சிகளிற்கும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பயன்படுத்த வேண்டும்.

பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அமைதிப்படையினருக்கு எதிராக இலங்கை அரசு வலுவான நடவடிக்கையை எடுத்தால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளிற்கான நிதியை இலங்கைக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

Previous Post

உடைந்தது தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு: சிவகரன் அணி வெளியேற்றம்

Next Post

கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் வர்த்தமானியில் இல்லை

Next Post

கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் வர்த்தமானியில் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures