Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகம்

June 6, 2021
in News, Politics, Sri Lanka News
0
நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகம்

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வந்த ஸ்டிக்கர்களுக்கு பதிலாக நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய, கொழும்புக்குள் பிரவேசிக்கும் இடங்களில் தங்களின் முழு விபரங்களை வழங்கிய பின் நாளாந்தம் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த ஸ்டிக்கர், நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் வரை செல்லுபடியாகும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இதனால், கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த புதிய ஸ்டிக்கர்களை அநாவசிய தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post

‘இளையராஜாவின் மோதிரம்’ – ஒரு சுவாரசியமான படத்தின் கதை!

Next Post

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

Next Post
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures