Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவேன்- கோட்டாபய

September 9, 2019
in News, Politics, World
0

தமது அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், மக்களின் சுயாதீனம் மற்றும் உரிமைகளையும் பாதுகாப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் 3ஆவது தேசிய மாநாடு கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று  இடம்பெற்றது.

இந்த மாநாட்டின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து மீண்டும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

மேலும், தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீரவினால், நாட்டில் உள்ள முக்கிய 15 சவால்களை தீர்ப்பதற்கான யோசனையொன்றும் இங்கு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கட்சி உறுப்பினர்களினால் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் விமல் வீரவன்ச குறித்த யோசனையை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தேசிய பாதுகாப்பு தொடர்பாக எமக்கு தெளிவான நிலைப்பாடுகள் இருக்கின்றன. இதுதொடர்பாக நாம் பேசும்போது அதனை திரிபுபடுத்த சிலர் முற்படுகிறார்கள்.

அதாவது, மக்களின் சுதந்திரத்தை இல்லாது செய்யவே நாம் முற்படுவதாக எம்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

நாம் அன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். அப்பாவி மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே நாம் இவ்வாறு மேற்கொண்டோம்.

பாதுகாப்பை பலப்படுத்துவது என்பது மக்களை சுதந்திரமாக வாழ வைப்பதற்காகவே அன்றி, அவர்களது உரிமைகளை பறிப்பதற்காக அல்ல என்பதை நான் மீண்டும் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் நாம் ஏற்படுத்தும் அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், மக்களின் சுயாதீனம், உரிமைகளையும் உறுதிப்படுத்துவோம் என்பதை நான் இந்த மாநாட்டில் தெரிவித்துக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.

Previous Post

வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இரு பிள்ளைகள் படையினரால் உயிருடன் மீட்பு

Next Post

சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் முதியவர் மீது மோதிய ரயில்

Next Post

சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் முதியவர் மீது மோதிய ரயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures