சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்தவர் பரணி. அந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தபோதும் அதன்பிறகு நடித்த படங்கள் வெற்றியை கொடுக்க வில்லை. இந்தநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தற்போது நாடோடிகள்-2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அந்தவகையில், பத்து வருடங்களுக்குப்பிறகு நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித் துள்ள பரணி, இந்த படம் தன்னை மீண்டும் சினிமாவில் பேசப்படும் நடிகராகும் என்று எதிர்பார்க்கிறார். இந்நிலையில், அக்டோபர் 10-ந்தேதி திரைக்கு வரும் நாடோடிகள்-2 படம் வெற்றி பெற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தா¢சனம் செய்து விட்டு திரும்பியுள்ளார் பரணி. சசிகுமார் நாயனாக நடித்தள்ள இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா ரவி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பரணி இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார்.