சீரற்ற வானிலை காரணமாக, நாடு முழுவதும் ஆறுகள் பெருக்கெடுத்து, பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தைச் சுற்றி யுள்ள தியவன்ன ஓயாவின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால் நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக, நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி, மணல் மூட்டைகள் அடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர், நாடாளுமன்ற வளாகத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.