2018 ஐ.பி.எல்-ன் உச்சகட்ட டென்ஷன் நாள் நேற்று. டெல்லியை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை, டென்ஷனை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி கடைசியில் தோற்றுப்போனது. மும்பை தோற்றதால் ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்துக்கு முன்னேற, பஞ்சாப், ராஜஸ்தானை பின்னுக்குத்தள்ள வேண்டும் என்றால் சென்னையிடம் பெருவெற்றிபெறவேண்டும் என்கிற நிலை. #CSKvsKXIP
சென்னை கேப்டன் தோனியும், பஞ்சாப் கேப்டன் அஷ்வினும் டாஸ் போடும்போது கிட்டத்தட்ட மும்பை வென்றுவிடும் என்கிற நிலையில்தான் இருந்தது. டாஸ் வென்ற தோனி, ஃபீல்டிங்கைத் தேர்தெடுத்தார். கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இரண்டு கேப்டன்களுமே ப்ளேயிங் லெவனில் என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதில்தான் இருந்தது. டு ப்ளெஸ்ஸியை நிச்சயம் அணிக்குள் தோனி அழைத்துவருவார் என எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே டு ப்ளெஸ்ஸி வந்தார். ஆனால், அவர் பில்லிங்ஸுக்கு பதிலாக இல்லாமல் வாட்ஸனுக்கு பதிலாக களமிறக்கப்பட்டதுதான் அதிர்ச்சி.
அதேபோல் பஞ்சாப் கேப்டன் அஷ்வின் யுவராஜ் சிங்குக்கு பதிலாக கருண் நாயரை அணிக்குள் சேர்த்திருந்தார். முஜீபுக்கு காயம் குணமாகததால் அவருக்கு பதிலாக, முன்பு பஞ்சாப் அணியில் ரெகுலர் வீரராக இருந்த டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டார்.