Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் சொல்ல வேண்டும்

September 23, 2018
in News, Politics, World
0
தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் சொல்ல வேண்டும்

மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் 23.09.2018 அன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் இவ்வளவு காலமும் பட்ட துன்பங்களிலிருந்து முதலாளிமார் சுரண்டல்களிலிருந்து நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த மைதானத்தில் நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதும், ஏற்றுக்கொள்ள கூடியதுமாகும். இந்த கோரிக்கைகளை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் பெற வேண்டும் என்றால் முதலாவதாக மக்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் பெற வேண்டும். அடிப்படை சம்பளம் 500 ரூபாயிலிரந்து 1000 ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் இதற்காகவே நாங்கள் ஒன்றுதிரண்டுள்ளோம்.

நாங்கள் பட்ட துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். இதற்கு நாட்டின் ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் செவி சாய்க்க வேண்டும்.

தொழிலாளர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு, உழைப்பில் நிமிர்ந்து நிற்கின்ற மக்களாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறுகின்ற மக்களாக தொழிலாளர்களை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என்றார்.

Previous Post

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒர் சம்பள நிர்ணய சபையை அமைத்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்

Next Post

கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு ஏற்பட்ட நிலை! குழப்பத்தில் குடும்பத்தினர்

Next Post
கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு ஏற்பட்ட நிலை! குழப்பத்தில் குடும்பத்தினர்

கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு ஏற்பட்ட நிலை! குழப்பத்தில் குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures