தெற்கு கரோலினா துப்பாக்கிச் சூடு : சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

தெற்கு கரோலினா துப்பாக்கிச் சூடு : சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஆரம்ப பாடசாலையருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவன், நேற்று (சனிக் கிழமை) உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த புதன் கிழமை 14 வயதான சிறுவன், 47 வயதான தன் தந்தையை சுட்டுக் கொன்று விட்டு, அவனது வீட்டிலிருந்து சுமார் 3 மைல் தொலைவில் அமைந்திருந்த ஆரம்ப பாடசாலைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இதில் இரு மாணவர்களும், ஆசிரியரும் காயமடைந்தனர். இவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜேக்கப் ஹால் என்ற 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த சிறுவன், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான். இத்தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலா அல்லது இனவெறித் தாக்குதலா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *