உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், எதிர்வரும் 20 ஆம் திகதி, ஜனாதிபதி முன்னிலையாகி சாட்சி வழங்கவுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சாட்சி பதிவுகளை, ஜனாதிபதி செயலகத்திலோ அல்லது ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலோ நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் மேற்கொள்வார்களென தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன, சட்டம் மற்றும் ஒழுங்குகள் முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

