Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொரோனா

November 23, 2021
in News, Sri Lanka News
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

கொரோனா தொற்றுக்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 37 மாணவர்கள் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன்  தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு திங்கட்கிழமை (22) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த 3 தினங்களாக கல்முனை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.

அத்துடன் திங்கட்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன்  கொரோனா பரிசோதனையின்போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும் பல இடங்களிலும் தொற்று அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை பிராந்தியத்திலும் தடிமல் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

ஆகவே எமது பரிசோதனை நடவடிக்கையிலும் கட்டுப்பாட்டு செயற்பாட்டிலும் சற்று இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டு நிலைமை தளர்த்தப்பட்ட நிலையிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் கொவிட் – 19 தொற்று அதிகரித்த நிலைமையை காணமுடிகிறது. 10 தொடக்கம் 20 வீதம் வரையான கொவிட் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்தவர்களாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதும் சுகாதார பழக்கவழக்கங்களை மிக இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.

பல இடங்களில் சுகாதார நடைமுறைகளை மீறி பொதுமக்கள் ஒன்றுகூடுவது தொடர்பாக முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் எமது சமூகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அநேகமாக தொற்றுக்குள்ளானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களாவர். எவ்வாறாயினும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் ஊடாகவே இத்தொற்றுக்களில் இருந்து நாம் பாதுகாப்பு பெறமுடியும் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கிண்ணியா படகு விபத்து எதிரொலி ! – முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

Next Post

மே.இ.தீவுகளின் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது ; 171 ஓட்டங்களினால் இலங்கை முன்னிலை

Next Post
மே.இ.தீவுகளின் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது ; 171 ஓட்டங்களினால் இலங்கை முன்னிலை

மே.இ.தீவுகளின் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது ; 171 ஓட்டங்களினால் இலங்கை முன்னிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures