தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக விஜயகாந்த குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு இன்னும் நீடிக்கவேண்டுமா என ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

