ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே – ரன்வீர்சிங் ஆகிய இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடருவேன் என்று கூறிய தீபிகா படுகோனே, தற்போது டில்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் சபாக் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் திராவகம் வீசப்பட்ட முகத்துடன் தீபிகா படுகோனே தோன்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனேயின் வயிறு பெரிதாக இருந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமாகி விட்டதாகவும், பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. அதையடுத்து, தீபிகாவிற்கு நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்து செய்திகள் அனுப்பி வருகின்றனர். ஆனால், இந்த வாழ்த்து தீபிகா படுகோனேயை கடும் கோபத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை. அதனால் இதுபோன்ற வதந்திகள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தீபிகா படுகோனே.