Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் கைதி­களை விடு­வித்தால், கைதான இரா­ணுவத்தினரையும் விடு­விக்­க­ வேண்டும் – டிலான்

October 14, 2017
in News, Politics
0
தமிழ் கைதி­களை விடு­வித்தால், கைதான இரா­ணுவத்தினரையும் விடு­விக்­க­ வேண்டும் – டிலான்

வடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென்றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படின் தெற்­கிலும் அதேபோக்கு பின்­பற்­றப்­ப­ட­வேண்டும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

யுத்­த­கா­லத்தில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக அல்­லது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு தெற்கில் பல இரா­ணுவ வீரர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். வடக்கில் புலி­க­ளுடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இரண்டு தரப்­பிற்கும் நியாயம் கிடைக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கில் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி நேற்­றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்பில் டிலான் பெரேரா மேலும் குறிப்­பி­டு­கையில்:-

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி வடக்கில் முழு­மை­யான ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­ட­தாக அறி­கின்றோம். இங்கு ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை குறிப்­பிட்­டா­க­வேண்டும்.

அதா­வது இரா­ணுவ வீரர்­களை கைது செய்து அவர்­களை பழி­வாங்­கு­வ­தாக தெற்கில் இன­வா­திகள் கூக்­கு­ர­லி­டு­கின்­றனர். அதே­போன்று வடக்கில் இளை­ஞர்­களை தமிழ் அர­சியல் கைதிகள் என்ற பெயரில் தடுத்­து­வைத்­துள்­ள­தாக போராட்டம் நடத்­தப்­ப­டு­கின்­றது.

இந்த இரண்டு நிலை­மை­க­ளையும் நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற விட­யத்தை வலி­யு­றுத்தும் தெற்கில் அர­சி­யல்­வா­தி­யான நான் இந்த விவ­கா­ரத்­திற்கு தீர்­வாக ஒரு யோச­னையை முன்­வைக்­கின்றேன். அதா­வது தமிழ் அர­சியல் கைதிகள் அநீ­தி­யான முறையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கருது அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளானால் பர­வா­யில்லை அதனை ஏற்­றுக்­கொள்வோம்.

ஆனால் அதே­நேரம் தெற்­கிலும் யுத்­த­கா­லத்தில் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள் என்ற குற்­றச்­சாட்டு பல இரா­ணுவ வீரர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே அவர்­க­ளையும் இதே அனு­கு­மு­றையைக் கொண்டு விடு­விக்­க­வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கின்றோம். காரணம் வடக்கில் அர­சியல் கைதி­களை விடு­வித்து விட்டு தெற்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­கா­விடின் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும்.

அதே­போன்று தெற்கில் உள்­ள­வர்­களை விடு­வித்­து­விட்டு வடக்கு, அர­சியல் கைதி­களை விடு­விக்­கா­வி­டினும் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும் எனவே இந்த அனைத்து விட­யங்­க­ளையும் உள்­வாங்கி செயற்­ப­ட­வேண்டும்.

அந்­த­வ­கையில் வடக்கு அரசியல் கைதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் தெற்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களையும் விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வடக்கில் கைதிகளை விடுவித்துவிட்டு தெற்கில் விடுவிக்காவிடின் அது பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடும்.

Previous Post

அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் ஹர்த்தால், மக்களின் வாழ்க்கையை குழப்பும் தமிழ் தேசிய் கூட்டமைப்பு

Next Post

எதிர்ப்பை மீறி, யாழ்ப்பாணம் விரைந்தார் மைத்திரி – தமிழ் தேசிய கூட்டமைப்பை காணவில்லை

Next Post
எதிர்ப்பை மீறி, யாழ்ப்பாணம் விரைந்தார் மைத்திரி – தமிழ் தேசிய கூட்டமைப்பை காணவில்லை

எதிர்ப்பை மீறி, யாழ்ப்பாணம் விரைந்தார் மைத்திரி - தமிழ் தேசிய கூட்டமைப்பை காணவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures