கருணாநிதியின் மறைவுக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், உக்ரைனில் இருப்பதால் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “சிறந்த தலைவர், தமிழ் அறிஞர், எழுத்தாளர் கருணாநிதியின் மறைவு குறித்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். தமிழுக்கும், தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு இது. உக்ரைனில் மாட்டிக்கொண்டதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளதை எண்ணி வருந்துகிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்”. என பதிவிட்டிருக்கிறார்.