தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் 23 ஏப்ரல் 1972 இல் பிறந்தவர் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியான இவர் ஒரு சிறந்த விடுதலை எழுத்தாளரும் ஆவார்.
2009 ஆண்டு போர் நிறைவடையும் வரை புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவர்.
1991-ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்த சிவகாமி ,தமிழினி என்ற இயக்கப் பெயரைப் பெற்றார் அதன் பிற்பட்ட காலத்தில் தமிழினி என்ற பெயராலேயே இறப்புவரை அவர் அறியப்பட்டார்.
தமிழினி ஒரு போராளி என்பதைவிட அவர் சிறந்த மனிதாபிமானி என்பதே முக்கியமானது ,பெண்கள் சிறுவர்களின் மீட்சி பற்றி தமிழினி எண்ணற்ற விடயங்களை எழுத்தில் தந்திருக்கின்றார் .
போராட்டத்திற்கும் அப்பால் சிறந்த பெண்ணியவாதியாக தமிழினியை போற்றவேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு .
தமிழினி புற்றுநோய் காரணமாக கொழும்பு மகரகமை புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 2015 அக்டோபர் 18 இல் தனது 43-ஆவது அகவையில் காலமானார்.

