ஆசிரியரின் தவறான நடத்தையால் குறித்த தனியாா் கல்வி நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.
குறித்த தனியாா் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம், நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்றதாகவும் நேற்று குறித்த ஆசிரியரை ஊர்த்தலைவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.எனினும், குறித்த ஆசிரியர் விசாரணைக்கு செல்ல மறுத்துள்ளார்.
இந்த நிலையில், விசுவமடு பகுதியில் உள்ள குறித்த தனியார் கல்வி நிலையம் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இதுபோன்று விசுவமடுவில் பல தனியார் கல்வி நிலையங்களில் குறித்த ஆசிரியரால் துஸ்பிரயோகங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

