Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டெங்கைக் கட்டுப்படுத்த சிறப்பு வேலைத்திட்டம்

October 14, 2017
in News
0

தேசிய ரீதி­யில் டெங்­குத் தாக்­கம் அதி­கம் காணப்­பட்ட கொழும்பு மாவட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட தேசிய டெங்கு ஒழிப்­புச் செயற்­பா­டு­களை, தேசிய ரீதி­யில் டெங்­குத் தாக்­கத்­தில் இரண்­டா­வ­தாக உள்ள யாழ்ப்­பா­ணத்தில் மேற்­கொள்­வது தொடர்­பில் ஆராய்ப்­ப­ட­வுள்­ளது.

எதிர்­வ­ரும் 31ஆம் திகதி அரச தலை­வ­ரின் செய­லா­ளர் தலை­மை­யில் இது ஆரா­யப்­ப­டும்.
இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.

குடா­நாட்­டில் அதி­க­ரிக்­கும் டெங்­குத் தொற்­றைக் கட­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான விசேட கூட்­டம் நேற்று மாவட்ட செய­ல­கத்­தில் நடை­பெற்­றது.

தேசிய டெங்­குக் கட்­டுப்­பாட்­டுப் பிரி­வின் பணிப்­பா­ளர் நிமால்க்கா, தக­வல் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் நிர்­மலி, மாவட்ட செய­லர் ஆகி­­யோர் தலை­மை­யில் இந்­தக் கூட்­டம் நடை­பெற்­றது.

அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்த­தா­வது-:

குடா­நாட்­டில் டெங்­குத் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் எதிர்­வ­ரும் 16ஆம், 17ஆம் திக­தி­க­ளில் சிறப்பு வேலைத் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வுள்­ளது.

கொழும்பு மாவட்­டத்­தில் பரீட்­சார்த்­த­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தேசிய டெங்கு ஒழிப்­புச் செயற்­பா­டு­களை யாழ்ப்­பா­ணத்­தில் மேற்­கொள்­வது தொடர்­பில் தேசிய டெங்கு ஒழிப்­புப் பிரி­வும், தக­வல் திணைக்­க­ள­மும் இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ளன.

அதற்கு சகல ஊட­கங்­க­ளும் ஓரே தினத்­தில் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும். இலத்­தி­ர­னி­யல் மற்­றும் தொலைக்­காட்சி ஊட­கங்­கள் நேரடி ஒளி­ப­ரப்பை மேற்­கொள்ள தக­வல் திணைக்­க­ளம் ஏற்­பாடு மேற்­கொள்­கின்­றது.

இந்த சிறப்பு வேலைத் திட்­டம் தொடர்­பில் எதிர்­வ­ரும் 31ஆம் திகதி கூட்­டம் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளது. – என்­றார்.

கூட்­டத்­தில் சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் பிர­தி­நிதி கருத்­துத் தெரி­வித்­தார்.

“அடுத்த முறை வீட்­டுத் தரி­சிப்­பின்­போது ஒவ்­வொரு வீட்­டுக்­கும் ஓர் பரி­சோ­தனை அட்டை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதில் பார்­வைக் குறிப்­பு­கள் பதிவு செய்­யப்­ப­டும். அதை வீட்டு உரி­மை­யா­ளர்­கள் பேணிப் பாது­காக்க வேண்­டும். வீட்­டுத் தரி­சிப்­பு­க­ளின்­போது அதைக் கண்­டிப்­பா­கக் காட்ட வேண்­டும்.
யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள 14 சுகா­தார வைத்­திய அதி­கா­ரி­கள் பிரி­வில் 9 பிரி­வு­க­ளி­லேயே டெங்­குத் தொற்று அதி­கம் காணப்­ப­டு­கின்­றது.”- என்று அவர் தெரி­வித்­தார்.

Previous Post

மைத்­தி­ரி­யி­டம் இருந்து சாத­கமான பதில் இல்லை- மனோ கணேசன்

Next Post

தனித்திருந்த மூதாட்டியை தாக்கி நகைகள் கொள்ளை

Next Post

தனித்திருந்த மூதாட்டியை தாக்கி நகைகள் கொள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures