Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெ. மரணம்! சசிகலா, பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டிக்கு விசாரணை

December 22, 2017
in News, Politics, World
0

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு சசிகலாவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அளித்துள்ளது.

ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவரது மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சி பிரிந்தது. கூடவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகங்கள் எழுந்தன. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றித் தெரிந்துகொள்ள, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆறுமுகசாமி, விசாரணையைத் தொடங்கி நடத்திவருகிறார். அதன்படி, சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுவருகிறது.

இந்த வகையில் தற்போது சசிகலா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவர் மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு 15 நாள்களில் பதிலளிக்குமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Previous Post

அந்த இரும்பு மனுஷியா இப்படி ஒரு வீடியோவை எடுக்க அனுமதித்திருப்பார்?

Next Post

ஜெயலலிதா அம்மா என்றால்சோ பன்பாபுவை அப்பா

Next Post

ஜெயலலிதா அம்மா என்றால்சோ பன்பாபுவை அப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures