ஜெயராம் மலையாளத்தில் நடிக்கும் புதிய படம் ‘கிராண்ட் பாதர்’.. இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று கொச்சியில் உள்ள ஹாலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது. நாம் ஏற்கனவே கூறியபடி ஜெயராமின் ஆசையை நிறைவேறும் விதமாக இந்த நிகழ்வில் மோகன்லாலும் மம்முட்டியும் ஒன்றாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி படத்தை துவங்கி வைத்தார்கள்.
அனீஸ் அன்வர் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பிள்ளை நடிக்கிறார். இவர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் வெளியான ‘ஊழம்’ படத்தில் பிருத்விராஜின் ஜோடியாக நடித்தவர். இந்தப்படத்தில் வயதான கேரக்டரில் நடிக்க உள்ளார் ஜெயராம்.