Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

ஜீரண சக்தியை மேம்படுத்தும் சுலைமானி டீ

June 3, 2021
in Health, News
0

கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

ஜீரண சக்தியை மேம்படுத்தும் சுலைமானி டீ

சுலைமானி டீ

பொதுவாக இந்த சுலைமானி டீயை கேரளா மக்கள் எடுத்து வருவது உண்டு. கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இந்த சுலைமானி டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று. கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் லெமன் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு ஆல்கஹால் அல்லாத செரிமான பானம் என்று கூறலாம். இந்த தேநீருக்கு சுலைமானி என்று பெயர். இது ஒரு அரபு வார்த்தை ஆகும். சுலைமானி என்பதற்கு “அமைதியான மனிதன்” என்று பொருள். திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இந்த மசாலா டீயை எப்படி தயாரிக்கலாம் என அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

தோலுடன் நசுக்கிய ஏலக்காய் – 2
இஞ்சி துருவியது – 1/2 ஸ்பூன்
இலவங்கப்பட்டை – 1
கிராம்பு – 1 அல்லது 2
சர்க்கரை – 3-4 டீஸ்பூன்
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்
டீத்தூள் – 2-3 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட மசாலாப் பொருட்களை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதனுடன் டீத்தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பிறகு வடிகட்டி கொள்ளுங்கள். வேண்டுமானால் அதனுடன் புதினா சேர்த்து குடியுங்கள்.

இந்த டீயை பிரியாணி போன்ற கனமான உணவிற்கு பிறகு எடுத்துக் கொண்டு வருவது நன்மை பயக்கும்.

இந்த டீ உங்க சீரண சக்தியை மேம்படுத்துகிறது. உங்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கவும் உதவி செய்கிறது.

http://Facebook page / easy 24 news
Previous Post

‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விஷால்

Next Post

கொரோனாவால் கோபம் அதிகரிப்பது உண்மையா?

Next Post

கொரோனாவால் கோபம் அதிகரிப்பது உண்மையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures