மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘திரிஷ்யம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். அதே கதையை தமிழில் கமலை வைத்து ‘பாபநாசம்’ என்கிற வெற்றி படமாகவும் ரீமேக் செய்தார்.. அதைத்தொடர்ந்து தமிழில் ஸ்திரமாக ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்வார் என நினைத்தால், மீண்டும் மலையாளம், ஹிந்தி பக்கம் சென்று விட்டார் ஜீத்து ஜோசப்
பாலிவுட்டில் இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் பாடி என்கிற படத்தையும் மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் மிஸ்டர் அன்ட் மிஸ் ரவுடி என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டு தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இந்த முறை தமிழில் அவர் கார்த்தியின் படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் துவங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தின் கதை குறித்து கதாசிரியர்கள் ரென்சில் டி சில்வா மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாரராம் ஜீத்து ஜோசப்.