ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்டமான சரித்திரப் படம் ‘பாகுபலி 2’. சுமார் 1700 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி வெளியானது. அங்கு 100 நாட்களுக்கும் மேல் ஓடி 15 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. ஜப்பான் சினிமா ரசிகர்கள் ‘பாகுபலி 2’ படத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்தார்கள். மகிழ்மதி அரசும், பாகுபலி கதாபாத்திரங்களும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன.
ஜப்பான் வினியோகஸ்தர் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு ஜப்பான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘பாகுபலி’ பற்றிய பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து கொண்டுள்ளார். இன்றிரவு அங்கு ‘பாகுபலி 2’ படத்தின் சிறப்புத் திரையிடல் இருக்கிறது. அதில் அவர்கள் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.