Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி-நெகிழ்ச்சி சம்பவம்

September 17, 2016
in News, World
0
சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி-நெகிழ்ச்சி சம்பவம்

சென்னையில் பிச்சை எடுத்தவர் இன்று கேம்பிரிட்ஜ் பட்டதாரி-நெகிழ்ச்சி சம்பவம்

வாழ்கையில் அதிர்ஷ்டம் பலமுறை வந்தாலும் அதற்கான தக்க முயற்சிகளை சரியான சந்தர்ப்பத்தில் எடுக்காவிடின் ஒருபோதும் வெற்றி பெறாது.

ஓர் காலகட்டத்தில் சென்னை தெருக்களில் பிச்சை எடுத்த ஓர் இளைஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சென்னை வந்த ஜெயவேல் என்ற இளைஞர் வேலை ஏதும் கிடைக்காததால் வறுமையின் பொருட்டு தனது பெற்றோருடன் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அப்போது தெருவோரம் வசிப்போரின் வாழ்க்கையை ஆவணப்படமாக பதிவு செய்ய வந்த உமா – முத்துராமன் தம்பதி ஜெயவேலை தத்தெடுத்து படிக்க வைத்துள்ளனர்.

அவர்கள் ஜெயவேலுவிற்கு கொடுத்த ஊக்கத்தால் நன்றாக படித்த ஜெயவேல் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றார்.

ஜெயவேலிற்கு மேற்படிப்பு படிக்க சில ஆர்வலர்கள் முன் வந்தனர். உலகத்தரம் வாய்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வில் தகுதிபெற்று அந்தப்பல்கலைக்கழகத்தில் கார்களின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பான பட்டப்படிப்பை முடித்தார்.

தற்போது இத்தாலியில் உள்ள டுரின் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வரும் ஜெயவேலின் படிப்பு செலவுக்காக உமா – முத்துராமன் தம்பதியினர் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். தான் தாய்நாடு திரும்பியதும் இந்த தம்பதியினருக்கு கடனை கொடுத்துவிட்டு தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் செய்வேன் என ஜெயவேல் கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

தமிழர்களின் உணர்வுகளை தூண்டும் தீக்குளித்த விக்னேஷின் இறுதி ஓடியோ..!

Next Post

கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப்புதைகுழி! போர்க்குற்ற ரகசியத்தை போட்டுடைத்த விமல் வீரவன்ச

Next Post
கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப்புதைகுழி! போர்க்குற்ற ரகசியத்தை போட்டுடைத்த விமல் வீரவன்ச

கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப்புதைகுழி! போர்க்குற்ற ரகசியத்தை போட்டுடைத்த விமல் வீரவன்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures