Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Gallery

சூனியப்பிரதேசத்தை கடத்தல் :வரலாற்று பதிவொன்று

December 6, 2017
in Gallery, Life, Uncategorized
0
சூனியப்பிரதேசத்தை கடத்தல் :வரலாற்று பதிவொன்று

நான் ஒரு விறுமாந்தவள் நான் ஒரு பிடிச்சிராவி நான் ஒரு துணிச்சல்காரி என்னை நினைக்கும்போது எனக்கே பயம் வருகிறது புலியும் ஆமியும் சமாதானம் பேசி ரணிலின் சூழ்ச்சியில் விழுந்தகாலம் பத்திரிகைத்தொழிலும் பல்கலை கல்வியுமாக நான் யாழ்ப்பாணத்தில் அலைந்த காலம் எம் சகபணியாளர்கள் ஒவ்வொருவராக சுடப்பட்டு வீதியில் போடப்பட்ட கொடிய காலம் வந்தது.

ஒவ்வொரு ஊடக உறவுகளையும் காவுகொடுத்தோம் சிறியவளாக நான் இருந்தாலும் பல மூத்த ஊடகவியலாளர்களால் புடம்போடப்பட்டவள் பேப்பர் விற்றுக்கொண்டிருந்த பதினேழு வயது பையனை பஸ்டாண்டில் வைத்து சுட்டுப் போட்டனர் நீ போய்விடு வன்னிக்கு என்கிறார் ராதேயன் அண்ணன் ,எம் ஆலோசகராக இருந்த அண்மையில் மறைந்த கோபு ஐயாவும் நீ போய்விடு அம்மா என்கிறார்

சரி போய்விடுகின்றேன் என கல்வியையும் கைவிட்டு வன்னிக்கு புறப்படுகின்றேன் அப்போதெல்லாம் என்னிடம் இருந்த ஒரே ஒரு சொத்து அந்த பழைய இரும்புக்கும் தேறாத கப்பிரேக் சயிக்கிள் அதையும் தூக்கி பஸ்ஸில் போட்டுவிட்டு புத்தகங்களையும் உடுப்புகளையும் உரப்பையில் கட்டி அதையும் பஸ்ஸில் போட்டுவிட்டு முகமாலை வருகின்றேன்முகமாலையில் இருந்து சூனியப்பிரதேசம் கடந்து போகும் பஸ்ஸுக்கு கரியர் இல்லை அதனால் என் சயிக்கிளை அதில் போடமுடியாது என்றுவிட்டான் கன்டெக்ட்டர் .”பாவமடா பொம்பிளைப்பிள்ளை இதுக்குள்ளால எப்பிடி வாறது உள்ளுக்குள்ளை ஏத்தடா சயிக்கிளை” என்றான் அவனின் நண்பன் முடியாது என்றுவிடடான் அந்த மூடன்சரி புத்தகங்களையும் உடுப்புகளையும் புலிகளின்பொயிண்டில்போடு நான் வருகிறேன் என்றுவிட்டு சயிக்கிளை எடுத்தேன்.

தனி ஒருத்தியாய் அந்த சூனிய பிரதேசத்தை கடக்க துணிகிறேன்யாருமற்ற பெரு வீதி யாரும் வரவேண்டாம் என்பதுபோல் தனிமையை ரசித்தபடி பரவி, நீண்டு, விரிந்து கிடந்தது .

கிட்ட தட்ட ஐந்து கிலோமீற்றர் வரும்போல இருக்கு சரியாக நினைவில்லைசுற்றும் முற்றும் பார்க்கிறேன் யாருமே இல்லை. என்னைத்தாண்டி என் உடமைகளை கொண்டுபோகும் பஸ் விர் என்று பறக்கிறது”எது நடக்கப்போகின்றதோ அதுவரைக்கும்தான் நான் ” அது நடந்து முடிந்துவிட்டால் நான் யார் என்பதை இந்த நடுத்தெருவில் விட்டுப்போகும் நாதாரிகள் அறியட்டும் என கறுவிக்கொண்டு சயிக்கிளை மிதிக்கிறேன்என் விவேகங்களை ஊடுகடத்தி காலுக்கு வேகத்தை கொடுக்கிறது மூளை – முதலாவது வளைவு தாண்டுகின்றேன்

யாரும் இல்லை இருபக்கமும் வடலிப் பனைகள் கிளுகிளுத்து பட படபட வென அடித்துக்கொள்கிறது ‘இவள் எங்கே இப்பிடி தனியே போகிறாள் என்பதுபோல் இருந்தது அந்த வடலிகளின் படபடப்பு ,நீண்ட வீதி – தீச்சுவாலையில் கருகிப்போன பனைகளும் தென்னைகளும் தலையற்ற முண்டங்களாய் என்னை பார்க்கின்றன அங்கங்கே திட்டு திட்டுத் திட்டாய் சாம்பல் மேடுகள் ,நாயுன்னி மரங்கள் பூக்களை சொரிந்திருந்தன ,எனக்கு என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாத திகில் நிறைந்த இடம் மனதில் இயல்ப்பை தவிர வேறேதும் இருக்கவில்லை.

சயிக்கிளை மிதிக்கிறேன் புலியும் இல்லாத ஆமியும் இல்லாத அந்த பகுதி திகில் சாம்ராய்ஜத்தின் தலைநகரமாய் கம்பீரமாய் இருந்தது அந்த பனி அகலும் காலையில் சூரிய கதிர்களை உடல் பூராக தழுவிக்கொண்டு, மெல்லிய காற்றை கிழித்துக்கொண்டு அந்த சூனியப்பிரதேசத்தை கடக்கிறேன் தமிழீழ இராட்சியத்தின் இளவரசியாக ….புலிகளின் வரவேற்பு கொட்டகைக்கு சற்று முன்பாக என் புத்தகங்களும் ஆடைகளும் அநாதரவாக கிடக்கிறது .அங்கிருந்த போராளிகள் கண்கள் விரிய என்னை பார்த்து தலையசைத்தனர் – ப்ரியமதா

Previous Post

சின்னத்தால் கமலை இழுக்க திட்டமிடுகிறார் விஷால்?

Next Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறியது

Next Post
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறியது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures