Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் தாமதமின்றி அமுல்படுத்தப்படும்… – ஜனாதிபதி

October 17, 2017
in News
0
சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் தாமதமின்றி அமுல்படுத்தப்படும்… – ஜனாதிபதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்கால சந்ததியினருக்காக சுற்றாடலைப் பேணுவதற்கும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டிய சகல செயற்திட்டங்களும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று (16) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற Sri Lanka NEXT நீல பசுமை யுகத்திற்கான தேசிய செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீல பசுமை யுகத்திற்கான தேசிய செயற்திட்டம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதுடன் அதனுடன் இணைந்ததாக விரிவுரைகள், மாநாடு மற்றும் விவாதங்கள் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் இடம்பெற்ற உலகளாவிய காலநிலை மாற்றங்கள் பற்றிய அரச தலைவர்களின் மாநாட்டில் பூகோள வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் தீர்மானிக்கப்பட்டன.

ஆசிய வலய நாடு என்ற வகையில் இலங்கை முதலாவதாக அவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், பசுமை அபிவிருத்தி தொடர்பான பல்வேறு துறைகளிலும் விசேட கவனம் செலுத்தி நீலப்பசுமை யுகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கும் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சீமெந்து கட்டிடங்கள் நிறைந்த நகரச் சூழலிலிருந்து விடுபட்டு மரங்கள், இலை, செடிகொடிகள், நீரோடைகள் என்பவற்றுடன் போஷிக்கப்பட்ட இயற்கையைப் பாதுகாத்து நாட்டினை பசுமை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.

சூழலானது மனிதனுக்கு சவால்மிக்க காரணியாக மாறியுள்ள தற்காலத்தில் சூழலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சகலரும் தாமதமின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

சுற்றாடல் விருதுகள் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டன.

அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, தயா கமகே, பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் சார்க் நாடுகளின் சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

அமெரிக்காவை அழிக்க, வடகொரியாவிடம் உள்ள திட்டம்

Next Post

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

Next Post
மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் | டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒருவாரத்திற்கு இடைநிறுத்தம்

May 9, 2025
மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

பாடசாலைக்கு முன்னால் மாணவியை கடத்த முயன்றமைக்கு காரணம் என்ன?

May 9, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

May 9, 2025
டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025

Recent News

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் | டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒருவாரத்திற்கு இடைநிறுத்தம்

May 9, 2025
மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

பாடசாலைக்கு முன்னால் மாணவியை கடத்த முயன்றமைக்கு காரணம் என்ன?

May 9, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

May 9, 2025
டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures