Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவா­ஜி­லிங்­கம் கைதாகி விசா­ரணை முன்­பிணை இருந்­த­தால் விடு­விப்பு!!

March 16, 2018
in News, Politics
0

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கம் முல்­லைத்­தீவுப் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது­செய்­யப்­பட்டு, ஒன்­றரை மணித்­தி­யா­லங்­க­ளின் பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

நீதி­மன்று அவ­ருக்கு ஏற்­க­னவே முன்­பிணை வழங்­கி­யி­ருந்­த­தால் அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 22 ஆம் திகதி வட்­டு­வா­கல் கோட்­ட­பாஜ கடற்­படை முகாம் காணி சுவீ­க­ரிப்­புக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து போராட்­டம் நடத்­தப்­பட்­டது. அதன்­போது அரச சொத்­துக்­க­ளைச் சேத­மாக்­கி­யமை உட்­ப­டப் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து சிவா­ஜி­லிங்­கத்­துக்கு எதி­ராக முல்­லைத்­தீவு பொலி­ஸார் முறைப்­பாடு பதிவு செய்­த­னர்.

கடந்த 27 ஆம் திகதி அது பற்­றிய விசா­ர­ணைக்கு வரு­மாறு பொலி­ஸார் அழைத்­தி­ருந்­த­னர். அன்று வடக்கு மாகாண சபை அமர்வு கார­ண­மாக பொலிஸ் நிலை­யத்­துக்­குச் சிவா­ஜி­லிங்­கம் செல்­ல­வில்லை.

அவர் சார்­பாக முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் முற்­பட்ட சட்­டத்­த­ர­ணி­கள் முன்­பிணை விண்­ணப்­பம் செய்­த­னர். விண்­ணப்­பத்தை ஏற்­றுக்­கொண்ட நீதி­மன்று அது பற்­றிய விசா­ர­ணைக்­காக வழக்­கைக் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தி­ருந்­தது.6ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் ஜெனீவா சென்­றி­ருந்­தார். அவர் சார்­பாக முற்­பட்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான எஸ்.எச்.எம்.மனா­று­தீன், ஆ.முகம்­மது பாறுக் ஜனாப் ஹறீஸ் ஆகி­யோர் முன்­பிணை தொடர்­பில் வாதிட்­ட­னர்.

“என் சார்­பாக மன்­றில் முற்­பட்ட சட்­டத்­த­ர­ணி­கள் இந்­திய உச்­ச­நீ­தி­மன்­றின் பிர­பல சட்­டத்­த­ரணி ராம்­கெத்­ம­லானி, தமி­ழக மறைந்த முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லி­தா­வுக்கு முன்­பிணை கோரி வாதா­டி­ய­போது முன்­வைக்­கப்­பட்ட வாதங்­க­ளைச் சுட்­டிக்­காட்­டி­ய­தோடு, இலங்­கை­யின் முன்­னாள் பாது­காப்பு செய­லா­ளர் கோத்­த­பாஜ ராஜ­பக்­ஸ­வுக்கு முன்­பி­ணை­கோ­ரி­ய­போது முன்­வைத்த விட­யங்­க­ளை­யும் சுட்­டிக்­காட்­டி­னர். அத­னை­ய­டுத்து முன்­பிணை நீதி­மன்­றால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது” என்று மாகாண சபை உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார்.

அத­னை­ய­டுத்து தலா இரண்டு இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான இரு­வ­ரது ஆள்­பி­ணை­யில் செல்ல முன்­பிணை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
இந்த நிலை­யில் முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்­துக்கு சிவா­ஜி­லிங்­கம் நேற்­றுச் சென்­றி­ருந்­தார்.

“சிவா­ஜி­லிங்­கத்­தைக் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தோம். பிணை­யா­ளி­களை உறு­திப்­ப­டுத்­திய பின்­னர் விடு­வித்­தோம்” என்று பொலி­ஸா் தெரி­வித்­த­னர்.

“என்னை சுமார் ஒன்­றரை மணி­நே­ரம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­னர். இது­தான் தமது நடை­முறை என்று பொலி­ஸார் கூறி­னர். வடக்கு மாகா­ணத்­திலே முத­லா­வது முன்­பிணை எனக்­குத்­தான் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு சட்­டத்­தை­நாடி முன்­பிணை கோரா­விட்­டால் குறைந்­தது ஆறு மாதங்­கள் நான் வெளி­யில் வர­மு­டி­யா­த­வாறு சட்­டப்­பி­ரி­வு­க­ளின் கீழ் என்­னைக் கைது­செய்­தி­ருப்­பார்­கள். முன்­பிணை வழங்­கி­யி­ருந்­த­தன் கார­ணத்­தால் நான் வெளி­யில் இருந்து கொண்டு இந்த வழக்­கைச் சந்­திக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது“ என்று சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு மாத­மும் இறுதி வெள்­ளிக்­கி­ழ­மை­க­ளில் நீதி­மன்­றில் கையெ­ழுத்­திட வேண்­டும் என்­றும் நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர் மீதான வழக்கை நீதி­மன்று எதிர்­வ­ரும் 2ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது.

ஆர்ப்­பாட்­டம் தொடர்­பி­லான இந்த வழக்­கில் மொத்­த­மாக 7பேர்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இன்­னும் மூன்று பேரை தேடு­வ­தாக பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­க­ளும் கைது­செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர்­தான் வழக்கு விசா­ர­ணை­கள் ஆரம்­ப­மா­கும் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Previous Post

முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் அனுப்பிவைப்பு

Next Post

காக்கேயன் குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

Next Post
காக்கேயன் குளம் பகுதியில்   கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

காக்கேயன் குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures