சிவனொளிபாதமலை பருவகாலம் நேற்று உதயமான பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமானது. ஆரம்பமான முதல் தினத்திலிலேயே 7550 மில்லிகிராம் கஞ்சா போதை பொருள் கொண்டு சென்ற நான்கு பேரை நோட்டன்பிரிஜ், தியகல பிரதேசங்களில் வைத்து ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மத்திய மாகாண கலால் திணைக்கள ஆணையாளர் காமினி அதிகாரி, நுவரெலியா கலால் திணைக்கள அதிகாரி உபுல் செனவிரத்தன, ஹட்டன் கலால திணைக்கள அதிகாரி திலக்கரத்ன அவர்களின் வழி காட்டலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸால்லவ பகுதியில் இருந்து சிவனொளிபாத மலையினை தரிசிக்க வருகை தந்தவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் கலால் தினைக்களத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.