ஒட்டாவா- அடக்க முடியாத பாகிஸ்தானிய கல்வி ஆர்வலரும் நோபல் பரிசு வெற்றியாளருமான மலாலா யுசாவ்சாயி-2012ல் தலிபான் குண்டுத்தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்தவருமான-கௌரவ கனடிய குடியுரிமை பெறுகின்றார். இது ஒரு வியக்கத்தக்க மரியாதையாகும்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதும் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விழா புதன்கிழமை பாராளுமன்ற ஹில்லில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவுடன் இணைந்து பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பார்வையாளர்களாக நிறைந்திருந்திருந்த சமயம் இவ்வைபவம் நடைபெற்றது.
பிரதம மந்திரி பிரேம் போட்ட குடியுரிமை சான்றிதழை வழங்கினார். கௌரவ கனடிய குடியுரிமை பெறும் ஆறாவது நபரும் மிக இளவயதினரும் இவராவார்.