Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோத்தபய ஜனாதிபதியாவார் என்ற செய்திக்கு, கொழும்பு பல்கலைக்கழகம் மறுப்பு

December 4, 2017
in News, Politics
0
2020 ஆம் ஆண்டு  யார்  இலங்­கையின்  தலை­வ­ராக   வருவார் என்ற   வகையில்  எவ்­வி­த­மான  ஆய்­வையும் கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு மேற்­கொள்­ள­வில்லை என்றும் அது­தொ­டர்பில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும்  தாம் எந்தப் பொறுப்­பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத் தின் கலைப்­பீட  ஊட­கத்­து­றைப் பி­ரிவு தெரி­வித்­தி­ருக்­கின்­றது.
கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பொன்றில் 2020 ஆம்  ஆண்டில் இந்த நாட்டின் தலை­வ­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்  ஷ தெரி­வு­ செய்­யப்­ப­டுவார் என்று நேற்று வெளியான  வார இறுதி சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி  வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்பில் கொழு ம்பு  பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு விடுத்­ துள்ள அறிக்­கை­யி­லேயே  இந்த விட­யங்கள்  குறிப் பி­டப்­பட்­டுள்­ளன.
இது தொடர்பில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின்  கலைப்­பீ­டத்தின் ஊட­கப்­பி­ரிவின்  இணைப்­பாளர்  பேரா­சி­ரியர் சமந்த ஹேரத் கையொப்­ப­மிட்டு விடுத்­துள்ள அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,- குறித்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­வாறு எவ்­வி­த­மான கருத்­துக்­க­ணிப்­பையும்  கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு செய்­ய­வில்லை.  இவ்­வாறு  கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் கருத்­துக்­க­ணிப்பை நடத்­தி­ய­தா­க, செய்­தியை வெளி­யி­டு­வதன் மூலம் வாச­கர்கள்   தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றனர்.
எந்­த­வொரு நபரும் ஆய்­வொன்றை நடத்­து­வதும் அதனை பிர­சு­ரிப்­ப­தற்கும் உரி­மையைக் கொண்­டி­ருக்­கிறார். ஆனால்  அவ்­வா­றா­ன­தொரு   கருத்­துக்­க­ணிப்பை  கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு செய்­தி­ருந்தால்  அதனை கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் செய்­த­தாக கூறு­வது வேறு­பட்ட அர்த்­தத்தைக் காட்டும்.
இந்த செய்தி வெளி­யா­னதன் பின்னர்   இவ்­வா­றா­ன­தொரு  கருத்­துக்­க­ணிப்பை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு  முன்­னெ­டுத்­ததா என்று பலர் என்­னிடம் கேட்­கின்­றனர். ஆனால்  அது தொடர்பில் எம்­மை ­யாரும்  தெளி­வு­ப­டுத்­த­வில்லை. அத­னால்தான் இது­தொ­டர்பில்  தெளி­வு­ப­டுத்தும் நோக்கில்  இந்த அறிக்­கையை நான் வெளி­யி­டு­கின்றேன்.
அந்தவகையில் 2020 ஆம் ஆண்டு தலைவர் யார் என்றவகையில் கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை  நடத்தியுள்ளதாக வெளிவந் துள்ள செய்தி பொய்யானது என்பதை தெரிவித் துக்கொள்கின்றேன். இந்த விடயத்துடன்  கொழும்
Previous Post

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவதாக நோர்வே, மலேசியா உறுதியளிப்பு

Next Post

9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

Next Post
9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures