நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 598 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 541 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
ஏனைய 72 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்தும், ஐவர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் ஆவர்.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 40,380 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 36,692 ஆக பதிவாகியுள்ளது.
இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 712 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 32,051 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 433 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.
அதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 187 ஆகும்.
01. கொழும்பு 15 மோதரை (முகத்துவாரம்) பிரதேசத்தில் முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த 67 வயது ஆண் நபர் ஆவார். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் 2020 டிசம்பர் 26ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

