Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

September 11, 2021
in News, Sri Lanka News
0
கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார்.  வவுனியா – மதியாமடு, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 73 வயதான செபமாலை இராசதுரை என்ற தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் மகன் இராசதுரை விஜி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்து சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே  மரணமடைந்தார்.

வவுனியாவில்  1668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் “காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார்.   இந்நிலையில் 27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

செல்வத்தை அள்ளித்தரும் மகாலட்சுமி விரத பூஜை

Next Post

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Next Post
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures