Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது!!

November 1, 2017
in News, Politics
0
கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது!!

வார்த்­தை­யில் ஒற்­றை­யாட்சி என்று கூறிக் கொண்டு கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது. பெய­ர­ள­வில் ஒற்­றை­யாட்சி என்று கூறிக்­கொண்டு நாட்­டைப் பிரிக்­கவே இவர்­கள் முயற் ­சிக்­கின்­ற­னர். இத­னைத் தடுக்க வேண்­டும். இல்­லையே நாடு அழி­வதை – பிள­வு­ ப­டு­வ­தைத் தடுக்க முடி­யாது.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போரால் நாட்­டைத் துண்­டாட முடி­யா­மல் போனதை அரசு இன்று புதிய அர­ச­மைப்பு ஊடாக நிறை­வேற்ற முயற்­சிக்­கின்­றது.

ஆயு­தத்­தின் மூல­மாகச் செய்ய முடி­யாத நகர்­வு­களை இன்று சட்­டத்­தின் மூலம் புதிய அர­ச­மைப்­பில் உள்­ள­டக்கி நாட்டைத் துண்­டா­டும் வேலைத்­திட்­டங்­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

பொது வாக்­கெ­டுப்பு மூல­மாக புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரு­வ­தாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­கின்­றார்.

பௌத்த தேரர் ஒரு­வ­ரும் அவ­ருக்குத் துணை­போய் புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வர வேண்­டும் என்று கூறி­யுள்­ளார். இவர்­கள் அனை­வ­ரும் மக்­கள் ஆத­ர­வில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தா­கக் கூறு­கின்­ற­னர்.

ஆனால் இவர்­க­ளுக்கு அர­ச­மைப்பைப் புதி­தாக உரு­வாக்க மக்­கள் ஆணை கிடைக்­க­வில்லை.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மாத்­தி­ரம் மக்­கள் ஆத­ரவு இருந்தபோதி­லும் அவ­ரது கொள்­கைப் பிர­க­ட­னத்­தில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தாக எங்­கும் சொல்­ல­வில்லை. மக்­களின் கருத்­த­றி­யும் நட­வ­டிக்­கைக்கு அப்­பால் உள்ள சில கார­ணி­களையும் உள்­ள­டக்­கப்­ப­டும் என்றே கூறப்­பட்­டுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவு கிைடக்­க­வில்லை. அவர்­க­ளுக்கு அதிக ஆச­னங்­கள் என்­றா­லும்கூடஅது முழு­மை­யான ஆத­ரவு அல்ல.

மைத்­தி­ர­பால சிறி­சே­ன­வின் கூட்­ட­ணி­யும், ஹக்­கீம் உள்­ளிட்ட சிறு கட்­சி­க­ளின் ஆத­ர­விலே இவர்­கள் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவைத் தக்­க­வைத்து வரு­கின்­ற­னர். மிக­வும் நெருக்­க­டி­யான நேரத்­தில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் கைகொ­டுத்து அர­சைத் தக்க வைத்து வரு­கின்­ற­னர்.

தலைமை அமைச்­சர் ரணில் கூறி­னால் போது­மா­னது இவர்­கள் உடனடியாக ஆதரவைத் தெரிவித்து விடுவார்கள் என்றார்.

Previous Post

சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தை

Next Post

நாவற்குழிப் பகுதியில் பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து

Next Post
நாவற்குழிப் பகுதியில் பேருந்து – முச்சக்கர வண்டி  விபத்து

நாவற்குழிப் பகுதியில் பேருந்து - முச்சக்கர வண்டி விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures