Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கால்பந்தாட்டத்‍தை முன்னேற்ற 30 கோடி ரூபா | பீபாவிடம் முன்வைக்கப்பட்டது செலவு மதிப்பீடு

April 25, 2022
in News, Sports
0
பிற்போடப்பட்டது சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

இலங்கை கால்பந்தாட்டத்தில் விசேட வே‍லைத்திட்டங்களை  முன்னெடுப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் 30  கோடி ரூபாவுக்கான செலவு மதீப்பீடு ஆவணமொன்றை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பிடம் (பீபா) முன்வைத்துள்ளது.

இதன்படி, நாட்டில் காணப்படும்  நான்கு  கால்பந்தாட்ட மைதானங்களை புனர்நிர்மானம் செய்து நவீனமயப்படுத்தப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு சிட்டி லீக் கால்பந்தாட்ட மைதானம், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானம், களனியிலுள்ள கால்பந்தாட்ட அபிவிருத்தி மத்திய நிலைய கால்பந்தாட்ட மைதானம் மற்றும் மாத்தறை தேசிய கால்பந்தாட்ட அபிவிருத்தி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களை கிடைக்கப்பெறும் நிதியின் ஊடாக நவவீனமயப்படுத்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கையில் கால்பந்தாட்டத்தின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்காக பீபாவிடம் முன்வைக்கப்பட்ட செலவு மதிப்பீட்டு ஆவணத்திற்கு சிறந்த பதில் கிடைத்துள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டு எதிர்கொண்டுள்ள நிலை தொடர்பாக விசாரித்ததுடன்,  இலங்கை கால்பந்தாட்டத்திற்கு அளிக்கப்பட்டுவரும் நிதியை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துவதாகவும் பீபா தலைவர் கியானி இன்பென்டினோ தன்னிடம் உறுதியளித்ததாக ஜஸ்வர் உமர் குறிப்பிட்டிருந்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

மஞ்சி கிண்ண தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை பிற்போட தீர்மானம்

Next Post

இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் | சந்திரிகா

Next Post
இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் | சந்திரிகா

இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் | சந்திரிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures