Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலாவதியான சட்டங்களால் இலங்கையில் மக்கள் பாதிப்பு – பிரதமர்

January 26, 2021
in News, Politics, World
0

இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் காலாவதியான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை இவ்வாறான அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதே அரசின் பொறுப்பு.என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்தார்.

புதிய ‘நீதி இல்லம்’ நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு நேற்று அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, உரையாற்றும்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நீதித்துறையின் உதவியை நாடும் பொதுமக்களின் இல்லமாக புதிய கட்டடத் தொகுதி அமைய வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.

ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் நாம் முன்னிற்கின்றோம்.

நாட்டில் நீதி வழங்குவதன் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், பிரச்சினைகளைத் திறம்பட தீர்ப்பதற்குமான அணுகுமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டு மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் – என்றார்.

Previous Post

மஹிந்தர் ‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு அடிக்கல்!

Next Post

தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம்

Next Post

தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures