கடந்த அரசின் காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் என தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் சிலருக்கு கல்வி நிர்வாக சேவையில் பதவிகள் வழங்க அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் மருத்துவ விடுமுறையில் பனி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் என தெரிவித்து 5௦௦ பேர் இவ்வாறு கல்வி நிர்வாக சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் உதவி ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர்களில் அதிகமானவர்கள் பொய்களை கூறுவதாகவும் எவரும் அரசியல் பழிவாங்களுக்குட்படவில்லை எனவும் அவ்வாறு பதவிகள் வழங்கப்படுமாயின் சரியான தகைமை உள்ள தம்மை விட உயர்ந்த பதவிகளை வழங்குவது பாரிய குற்றம் எனவும் இவ்வாறு மருத்துவ விடுமுறையின் மூலம் தாம் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

