பாகிஸ்தானிய கராச்சி நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 7 சிறுவர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி வெள்ளம் காரணமாக அந்நகருக்கான விமானப் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ள சிந்து மாகாண முதலமைச்சர் செய்த் முராத் அலி சாஹும் ஆளுநர் மொஹமட் ஸுபைரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாகாண அமைச்சர்களுக்கும் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.