ரஷ்யாவில் மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள சிமென்ட் கட்டைகளில் இளைஞர் ஒருவர் துள்ளிக்குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எகாடரின்பர்க்கைச் ((Yekaterinburg)) சேர்ந்த ஷெர்ஙஸ்டையாசென்கோ ((Sherstyachenko)) என்ற இளைஞர் உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்வதில் விருப்பம் கொண்டவர். கடந்த சில தினங்களுக்கு முன் தனது நகரின் உள்ள பலநூறு அடி அளவிற்கு உயரமான கட்டடத்திற்குச் சென்ற அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளில் குதித்து குதித்து ஓடினார். ட்ரோன் மற்றும் செல்ஃபி ஸ்டிக் கொண்ட செல்போன் உதவியுடன் தானே அவர் படம் பிடித்துள்ளார்