Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே நேர்க்கோட்டில் புகழான எட்டு சிவாலயங்கள் – புரியாத மர்மங்கள்

July 15, 2016
in News, World
0
ஒரே நேர்க்கோட்டில் புகழான எட்டு சிவாலயங்கள் – புரியாத மர்மங்கள்

ஒரே நேர்க்கோட்டில் புகழான எட்டு சிவாலயங்கள் – புரியாத மர்மங்கள்

d

இந்தியாவில் பஞ்சபூத தலங்கள் என அழைக்கப்படும் புகழான ஐந்து சிவாலயங்களும் தீர்க்க ரேகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலகின் பல பகுதிகளில் கிடைக்கும் ஆச்சரியங்களில் வியந்து வரும் இந்தியர்களை தங்கள் முன்னோர்களின் ஞான சித்தியை இதுவரை அறியாதிருந்ததை நினைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், மேலும், மூன்று சிவாலயங்களும் ஒரே நேர்க்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்திலிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்க்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலம்

நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை

சிவனின் இந்த பஞ்சபூத தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்

இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது..

ஆயிரம் மைல்கள்

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

தீர்க்கரேகை நிலை

1) கேதார்நாத் – கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காளஹஸ்தி – ஸ்ரீ காளஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் – நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

8) ராமேஸ்வரம் – ராமநாத சுவாமி கோயில் (9.2881, 79.3174)

ஏனைய சிவாலயங்கள்

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்க்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது ஆச்சரியம் கலந்த செய்தியாக இருந்தாலும் எல்லா கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்படவில்லை. ஒரே திட்டத்தின் படியோ, ஒரே ஆட்சியின் கீழோ, ஒரே வேலையாட்களாலோ கட்டப்படவில்லை. அதனால், இது இயல்பாக அமைந்திருப்பதுதான். இதிலும் திருவானைக்காவல், திருவண்ணாமலை, கோயில்கள் நேர்க்கோட்டில் சற்று விலகியும் காணப்படுகின்றன.

ஆகமவிதிப்படி கட்டியதில் அப்படி அமைந்ததாக சொல்லமுடியாது நேர்க்கோட்டில் இல்லாத எல்லா கோயில்களும் கூட அவ்விதிப்படிதான் கட்டப்பட்டுள்ளது.

இது மனித முயற்சியை மீறி அமைந்ததுதான் இதற்கான பெருமையும் கடவுளையே சேருவதுதான்.

Tags: Featured
Previous Post

வியப்பூட்டும் வரலாற்று அதிசயம்! குஜராத்தில் ஓர் தாஜ்மஹால்

Next Post

குழந்தையை கொன்ற கொடூர தந்தை!!

Next Post
குழந்தையை கொன்ற கொடூர தந்தை!!

குழந்தையை கொன்ற கொடூர தந்தை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures