வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 அன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கொண்டாடினர் .
சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவில்பிறந்தநாள் விழா ஏற்பாடாகியது. இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய பிரிவு மற்றும் மகப்பேற்று வைத்திய பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கேக் வெட்டி கொண்டாடினர்.


