Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏறாவூரில் 53 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

November 26, 2017
in News, Politics
0

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறாவூர் நகரில் உள்ள திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர் உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று நண்பகல் வரை சுமார் 53 பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்தவர்களில் 25 சிறுவர்கள் 18 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

எனினும் இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம்.பழீல் தெரிவித்தார்.

ஏறாவூர் பள்ளியடி வீதியிலுள்ள திருமண வீடொன்றில் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பிரியாணியை உட்கொண்டதையடுத்து இந்த உபாதை ஏற்பட்டுள்ளது.

முதலில் வயிற்று வலியும் அதனைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டர்கள் தெரிவித்தனர்.

சமையல்காரரது வீட்டிலேயே திருமண பரிமாறலுக்கான உணவு சமைக்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

மெக்சிக்கோவில் ஒரே எாிமலையில் 3 முறை வெடிப்பு ஏற்பட்டதால் பதற்றம்

Next Post

மனைவியை கோடாரியால் 40 முறை அடித்துக் கொன்ற கணவன்.

Next Post

மனைவியை கோடாரியால் 40 முறை அடித்துக் கொன்ற கணவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures