உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்யும் 70 ஆவது உலக சுகாதார தின வைபவம் நாளை (07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு தாமரைத்தடாக வளவில் நாளை முற்பகல் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பிரதமரும் பங்ககேற்கவுள்ளார். அத்துடன், உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும், தெற்கு மற்றும் கிழக்காசி நாடுகளுக்கான பணிப்பாளரும், 12 நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் நாளைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, இலங்கை சுகாதாரத் துறையில் இடம்பெற்ற 70 வருட முன்னேற்றங்கள் தொடர்பான பிரசுரங்கள் வெளியிடப்படவுள்ளன. இந்நிகழ்வை சிறப்பித்து முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. நாளை உலக சுகாதார தினம் என்பது குறிப்பிடத்தக்கது.