Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ வெளியீட்டு திகதி அறிவிப்பு.

April 19, 2022
in Cinema, News
0
உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ வெளியீட்டு திகதி அறிவிப்பு.

நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘கனா’ என்ற படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :நெஞ்சுக்கு நீதி’. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர் ஆரி அர்ஜுனன், இளவரசு, ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை பொலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், ஜீ ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தோமஸ் இசை அமைத்திருக்கிறார்.

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் மே மாதம் 20ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் என்பதால் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ராஷ்யாவின் கை ஓங்குவது ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது | கிருபா பிள்ளை

Next Post

இலங்கையின் உணவு நெருக்கடியை தீர்க்க பலமிக்க நாடுகளுடன் பேச்சு நடத்திய ரணில்

Next Post
வட. மாகாணம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும்: பிரதமர்

இலங்கையின் உணவு நெருக்கடியை தீர்க்க பலமிக்க நாடுகளுடன் பேச்சு நடத்திய ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures