Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இவ்வருடமும் மாகாண சபைத் தேர்தல் இல்லை

April 15, 2021
in News, Politics, World
0

நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடமும் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில, 1988 ஆம் ஆண்டின் எண் 2 மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் இதுவரை திருத்தம் மேற்கொள்ளப்படாததால், மாகாண சபை தேர்தல் இந்த வருடத்துக்குள் நடைபெற வாய்ப்பில்லை என்றும், பெரும்பாலும் 2022 இல் நடைபெறும் வாய்ப்புகளே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் இந்த விவகாரம் சம்பந்தமாக ஒரு இறுதி முடிவை எட்டுவோம் என்று நம்புகின்றோம் என்றும், எதிர்வரும் 19 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள அரச பங்காளிகளின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கம்மன்பில கூறியுள்ளார்.

இதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “பெரும்பாலும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு விரைவில் தீர்வு

Next Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 சாரதிகள் கைது

Next Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 சாரதிகள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures