இலங்கை தமிழர்களின் பிரச்சினையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது.
அதேநேரம் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் தாம் ஆதரிப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமிழ் அபிலாஷைகளை இணைக்கும் முந்தைய நிலைப்பாட்டைஇந்தியா மீண்டும் வலியுறுத்தியபோதும் வாக்கெடுப்பு தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

