Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

July 13, 2016
in News, Politics
0
இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான SEM சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சுவிஸில் புதிதாக புகலிடம் வழங்குவதில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகள் தற்போது ஓரளவிற்கு சீரடைந்துள்ளது என சுவிஸ் அரசு நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

’’தற்போது இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. குறிப்பாக, கருத்து சுதந்திரம், பொது இடங்களில் கூடுவது உள்ளிட்ட மனித உரிமைகள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிப்பதற்கு கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளும் தற்போது குறைந்து வருகிறது.

எனினும், மனித உரிமைகள் தொடர்பான சில விடயங்களில் முன்னேற்றம் இல்லை என்பதால், தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும்போது தனிக்கவனம் செலுத்தப்படும்.

நடப்பாண்டு மே மாதம் இறுதி வரை 5,000 இலங்கை குடிமக்கள் சுவிஸில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3,674 நபர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

1,316 நபர்களின் புகலிடக் கோரிக்கை மனுக்கள் தற்போது நிலுவையில் உள்ளன. மேலும், 1,613 நபர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், இவர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழலில் உள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கான சுவிஸ் கவுன்சிலின் துணை தலைவரான Anna Annor என்பவர் 47 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’’இலங்கை நாட்டிற்கு திரும்பிச் செல்லும் தமிழர்கள் அனைவரையும் ‘தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு’ ஆதரவானவர்கள் என அந்நாட்டு அரசு முடிவு செய்கிறது.

இதன் விளைவாக, கொழும்பு விமான நிலையத்திலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறையிலும் அடைக்கப்படுகிறார்கள்.

2009ம் ஆண்டு யுத்தத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களில் பலரை அந்நாட்டு அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை.

எனினும், கடந்த 2014ம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் சூழல்கள் மாறியுள்ளன. கடந்த ஜனவரி முதல் பெப்ரவரி வரை இலங்கை நாட்டிற்கு திரும்பியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சுவிஸில் புகலிடம் கோரும் இலங்கை குடிமக்கள் மீது கடுமையான நிபந்தனைகள் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: Featured
Previous Post

14 வயது தமிழனின் அபார கண்டுபிடிப்பு

Next Post

மைத்திரி – ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

Next Post
மைத்திரி – ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

மைத்திரி - ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025

Recent News

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures