Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் கொரோனா பலி 1500 ஐ கடந்தது!

June 2, 2021
in News, Sri Lanka News
0
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1500 ஐ கடந்துள்ளதுடன் இதுவரை நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஜூன் முதலாம் திகதி ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும் மே 20 ஆம் திகதி திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 42 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் நேற்றையதினம் மொத்தமாக 43 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி,

மே 20 – 01 மரணம்

மே 21 – 01 மரணம்

மே 23 – 01 மரணம்

மே 25 – 02 மரணங்கள்

மே 26 – 02 மரணங்கள்

மே 27 – 03 மரணங்கள்

மே 28 – 06 மரணங்கள்

மே 29 – 09 மரணங்கள்

மே 30 – 15 மரணங்கள்

மே 31 – 02 மரணங்கள்

ஜூன் முதலாம் திகதி வரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக 12 பெண்களும் 31 ஆண்களும் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

ஹெம்மாத்தகம, பாணந்துறை, புத்பிட்டிய, தெவலபல, கொழும்பு – 15, நிட்டம்புவ, இறக்காமம் – 02, நாரம்மல, பமுனுகம, ஹீனட்டியங்கல, திவிதுர, வக்வெல்ல, காலி, கொச்சிக்கடை, சீதுவ, மஹகித்கம, கொழும்பு – 05, மாத்தளை, ஹொரனை, உஸ்ஸாப்பிட்டிய, மகரகம, லுனுவில, மாத்தளை, நொச்சியாகம, அநுராதபுரம், திவுலப்பிட்டிய, தெஹிவளை, மாலமுல்ல மேற்கு, ஹபருகல, களுத்துறை, பத்தேகம, கொட்டுகொட, வத்தளை, நெடுந்தீவு யாழ்ப்பாணம், வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனை, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, கொழும்பு 07, எல்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.

• அவர்களின் வயதெல்லை

வயது 20 – 29 – 00

வயது 30 – 39 – 02

வயது 40 – 49 – 02

வயது 50 – 59 – 06

வயது 60 – 69 – 16

வயது 70 – 79 – 10

வயது 80 – 89 – 06

வயது 90 – 99 – 01

வயது 99 இற்கு மேற்பட்டவர்கள் – 00

• உயிரிழந்த இடங்கள்

வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 07

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் – 00

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் – 36

• உயிரிழந்தமைக்கான காரணங்கள்

நாட்பட்ட ஈரல் நோய், கொவிட் 19 நுரையீரல் தொற்று, இதயநோய் நிலைமை, குருதிப்புரை நோய், நிமோனியா நீரிழிவு, தவிவிர நுரையீரல் அழற்சி, பல தொகுதி நோய், தவிவிர கொவிட் நிமோனியா, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, பல உறுப்புக்கள் செயலிழந்தமை, தீவிர நிமோனியா, மோசமாக குருதி நஞ்சானமை, பக்கவாதம், சிறுநீரக நோய், உயர் குருதியழுத்தம் நாட்பட்ட சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் கொவிட் நிமோனியா நிலைமைகள் ஆகும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சங்கானையில் ஏன் கொரோனா ஊசி ஏற்றப்படவில்லை – மக்கள் கேள்வி

Next Post

எம் இன அழைப்புகளை நினைவுகூர்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லை – ப.கஜதீபன்

Next Post

எம் இன அழைப்புகளை நினைவுகூர்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லை - ப.கஜதீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures