Wednesday, May 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையின் நிதி நெருக்கடி ராஜபக்ச குடும்பத்தின் முடிவாக அமையலாம் | அவுட்லுக்

March 26, 2022
in News, Sri Lanka News
0
சமல் வீட்டில் அவசரமாக ஒன்று கூடிய ராஜபக்சர்கள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசியலில் ஒரு தசாப்தத்திற்கும் மேல் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாக்களுக்கும் இது முடிவின் தருணமா?

நிதி விடயங்களை உரிய முறையில் நிர்வகிக்காதது இலங்கையின் பொருளாதாரம் கிட்டத்தட்ட செயல் இழந்துள்ளது போன்றவற்றால் வீதிகளில் காணப்படும் சீற்றத்தினை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ராஜபக்சாக்களின் நிறுவனம் செயல் இழக்கின்றது.

கோ பக் கோத்தா என்ற சுலோகங்களையும் பதாகைகளையும் முன்னர் அவர்களை நாட்டின் வீர புருசர்கள் என போற்றியவர்களின் கரங்களில் காணமுடிகின்றது.

எண்ணை விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ள ரஸ்ய உக்ரைன் மோதல் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அந்நியசெலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பெட்ரோல் முதல் சமையல் எரிவாயு மருந்துகள் அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் உட்பட அனைத்திற்கும் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் செழிப்பான தலைநகரமான கொழும்பு தற்போது காலியான அலமாரிகளும் நீண்ட வரிசையில் மக்கள் காணப்படும் நகரமாக மாறியுள்ளது.

பல்பொருள் அங்காடிகள் காலியாக காணப்படுகின்றன, பொதுமக்கள் பாண்கள் போன்றவற்றிற்கு கூடநீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

பெட்ரோல் மண்ணெண்ணை விற்பனை நிலையங்களில் விநியோகங்களை மேற்பார்வை செய்வதற்கு இராணுவத்தை பயன்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

நீண்டநேரம் வரிசையில் காத்திருந்ததால் மூன்று முதியவர்கள் உயிரிழந்தை தொடர்ந்து இராணுவத்தை பயன்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

சிறிதளவு பெட்ரோலை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்- இலகுவில் கோபமடையும் – வரிசைகளில் காத்திருக்கும் சாரதிகள் தங்களை போன்ற களைப்படைந்த கோபக்கார கார்சாரதிகளுடன் கைகலப்பில் ஈடுபடுகின்றனர்.

இது பொதுமக்களிற்கு மிகவும் அச்சம் தரும் நிலைமையாக காணப்படுகின்றது- மார்ச் ஐந்தாம் திகதி முதல் மின்சார நெருக்கடி முடிவிற்கு வரும் என அரசியல் தலைமை வாக்குறுதி அளித்திருந்த போதிலும் நாளந்தம் ஐந்து முதல் ஏழு மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது

இலங்;கையில் நாங்கள் நிச்சயமற்றதன்மை அச்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்- எங்கள் நிச்சயமற்ற தன்மைகளின் பட்டியல் அதிகரிக்கின்றது –விரைவில் நாங்கள் பால்மா அரிசி காய்கறி இல்லாத நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும், மின்சாரமும் எரிபொருளும் கிடைக்குமா?சமையல் எரிவாயு கலவையில் மாற்றங்களை மேற்கொண்டதால் வெடிப்பு நிகழுமா? போதியளவு மருந்துகள் கிடைக்குமா இப்படி எங்கள் பட்டியல் நீள்கின்றது என்கின்றார் சமந்த மென்டிஸ் – பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கொழும்பில் ஆடம்பர பகுதியொன்றில் தான் பார்த்ததை அவர் இவ்வாறு வர்ணிக்கின்றார்.

பிளவர் வீதியில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக்கு சென்றவேளை நான் சமையல்எரிவாயு சிலிண்டர்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை பார்த்தேன் – என்ன நடக்கின்றது என பார்த்தவேளை எனது கண்களின் எல்லைவரை சமையல்எரிவாயு சிலிண்டர்களை பார்த்தேன்,காலை ஆறு மணிக்கு வந்தவர்கள் மதியம் ஒரு மணிவரை காத்திருந்தனர்,இது என்றோ ஒரு நாள் நிகழும் விடயமில்லை- நாளாந்தம் நாங்கள் பார்க்கும் விடயம்,நான் ஒரு இளம் சட்டத்தரணியுடன் பேசினேன் அவர் தான் சமையல் எரிவாயு லொறியொன்றை துரத்திச்சென்று சிலிண்டரை வேண்டியதாக தெரிவித்தார். நாட்டின் மூலோபாய சிந்தனையின்மையின் பலவீனமே இதற்கு காரணம் என்கின்றார் அவர்.

சீமா குகா

நன்றி – அவுட்லுக்

Previous Post

Gfinity launching competitive league for teams to draft amateur players

Next Post

24 கரட் தங்க பவுணொன்றின் விலை 167,000 ஆக உயர்வு

Next Post
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

24 கரட் தங்க பவுணொன்றின் விலை 167,000 ஆக உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025

Recent News

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures